என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோகைமலை அருகே நிலத்தகராறு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்28 Nov 2020 11:44 AM GMT (Updated: 28 Nov 2020 11:44 AM GMT)
தோகைமலை அருகே நிலத்தகராறு தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தோகைமலை:
தோகைமலை அருகே உள்ள தந்திரிபட்டியை சேர்ந்தவர் பூசாரி (வயது 45). இவரது மனைவி மலைக்கொழுந்தி. இவர்களுக்கு சொந்தமான நிலம் கொசூர் அருகே மேட்டூரில் இருந்து உள்ளது. இந்த நிலத்தை மலைக்கொழுந்தியின் உறவினர்களான அதேபகுதியை சேர்ந்த பெருமாள் (50), மங்கான் (45), மலைக்கொழுந்தான் (43), முருகன் (50), வெள்ளையன் (40), சீரங்கன் (70), பழனி (35) ஆகிய 7 பேரும் சேர்ந்து மலைக்கொழுந்திக்கு கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் பூசாரி மேட்டூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை ஏன் தர மறுக்கிறீர்கள்? என்றுகேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் உள்பட 7 பேரும் சேர்ந்து, பூசாரியிடம் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் 7 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X