search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 8 பேர் கைது

    திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கே.கே.நகர்:

    திருச்சி கல் பட்டறை 2-வது தெருவில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற ராஜகணபதியை (வயது 35) எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி உறையூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் செந்தில் முருகனை(38) உறையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.8,100 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுபோல் காட்டுப்புத்தூரில் லாட்டரி சீட்டு விற்ற குணசேகரன் (55), டினோ பரமேஷ் (32), குமார்(47), கண்ணன் (44), விஜயகுமார் (20), ராஜேந்திரன் (40) ஆகிய 6 பேரை காட்டுப்பத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×