search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரியகுளம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

    பெரியகுளம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×