search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

    சேலம் மாநகர் பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர ரோந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அம்மாபேட்டை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோபால்செட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த நவீன்ராஜ் (வயது 21), தமிழ்செல்வன் (25), ஜீவா (26) ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×