என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்தி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்28 Nov 2020 8:28 AM GMT (Updated: 28 Nov 2020 8:28 AM GMT)
பரமத்தி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூர் பெருமாம்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 50), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (45). அண்ணாதுரை தினமும் மது அருந்திவிட்டு மனைவி சகுந்தலாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்ணாதுரை நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அண்ணாதுரை விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.
இதை பார்த்த சகுந்தலா, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அண்ணாதுரையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அண்ணாதுரை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X