search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி பலி

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரதகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 77). இவருடைய மனைவி ராமாயி (70). விவசாய கூலி தொழிலாளர்கள். நேற்று காலை முதலே அந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. மாலை ராமாயி வீட்டில் சமையல் செய்ய சென்றார். அப்போது அடுப்பை பற்ற வைத்த போது திடீரென சிலிண்டர் வெடித்து அவர் மீது தீப்பற்றி கொண்டது.

    அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மற்றொரு அறையில் இருந்த வெங்கடாஜலம் எழுந்து வந்து மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பிடித்து கொண்டது. அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் உடல் கருகிய ராமாயி சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த தீக்காயமடைந்த வெங்கடாஜலத்தை மீட்டு அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடாஜலம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ஓட்டு வீடு சேதமடைந்தது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×