search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    ராமேசுவரத்தில் இன்று வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

    வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குலாம் அலி மாலிக். இவரது மகன் நூர் ஜமால் மாலிக் (வயது 23). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக ராமேசுவரத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை ராமேசுவரம் பழைய போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் பதிப்பதற்காக நூர் ஜமால் மாலிக் சென்றார். அங்கு டைல்ஸ் பதித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட நூர் ஜமால் மாலிக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வீட்டு உரிமையாளர் ராமேசுவரம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நூர் ஜமால் மாலிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×