என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் கட்டிட மேஸ்திரி விபத்தில் பலி
Byமாலை மலர்27 Nov 2020 4:22 AM GMT (Updated: 27 Nov 2020 4:22 AM GMT)
நாமக்கல்லில் கட்டிட மேஸ்திரி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள என்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது 32). கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் நாமக்கல்லுக்கு வேலைக்கு வந்த சின்னராசு, இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நாமக்கல் - சேலம் ரோடு சாமி நகர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சின்னராசுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராசு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது தாயார் மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X