search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ வைத்ததில் எரிந்து நாசமான 3 மோட்டார் சைக்கிள் களை படத்தில் காணலாம்.
    X
    தீ வைத்ததில் எரிந்து நாசமான 3 மோட்டார் சைக்கிள் களை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் அருகே நள்ளிரவில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

    திண்டுக்கல்லில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் நள்ளிரவில் தீவைத்து எரிக்கப்பட்டன.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய தம்பி சரவணன். இவர்கள், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அண்ணன், தம்பி இருவரும் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தனர். மேலும் அவர்களின் உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் அங்கு நின்றது.

    இந்தநிலையில் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென 3 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. அதை பார்த்த கணேசன் குடும்பத்தினர் கதவை திறந்து வெளியே வர முயன்றனர். ஆனால், வாசல் முன்பு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததால், அவர்களால் வெளியே வரமுடியவில்லை. எனினும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வெளியே வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர் கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், 3 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில், கணேசன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அதில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்னர், மர்ம நபர்கள் அங்கு வந்து பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தது தெரியவந்தது. அதேநேரத்தில் தீ வைத்தவர்கள் யார்? எதற்காக தீவைத்தார்கள்? என்பது மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×