search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்- எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

    ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சு ரவி எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சு ரவி எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவ- மாணவிகளுக்கு, மருத்துவம் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பெண்களை அதிகம் ஈடுபடுத்துவது, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை திண்ணை பிரசாரம், மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வரும் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்த அனைவரும் பாடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

    கூட்டத்தில் தமிழ்நாடு வக்புவாரிய வாரியத்தலைவர் முகமதுஜான் எம்.பி., சம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் முரளி, மாவட்ட பொருளாளர் ஷாபுதின், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் சுகுமார், மேல்விஷாரம் நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுள்ளா, வாலாஜா ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல் தமிழரசன் உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர் செயலார்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் நன்றி கூறினார்.
    Next Story
    ×