என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே 11-ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் பெற்றோருடன் கைது
Byமாலை மலர்25 Nov 2020 8:53 AM GMT (Updated: 25 Nov 2020 8:53 AM GMT)
பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
திருப்பூர் மாவட்டம் பவானி நகர் பகுதியைச் சேர்ந்த16 வயதுடைய பெண் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மதுரை சோழவந்தான் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சடையாண்டி (வயது 30) என்பவருக்கு கடந்த 20-ந் தேதி மாணவியை கட்டாய திருமணம் செய்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு புகார் வந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து 16 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்ததாக சடையாண்டி மற்றும் அவரது பெற்றோர் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சடையாண்டியை போக்சோவில் கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உதவிய சிறுமியின் பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X