என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்ப தகராறில் 8 வயது பெண் குழந்தை விஷம் கொடுத்து கொலை- தாய் உயிருக்கு போராட்டம்
Byமாலை மலர்25 Nov 2020 7:38 AM GMT (Updated: 25 Nov 2020 7:38 AM GMT)
மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாருதி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி உஷா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் மகிமா என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மோகன்ராஜ் கடந்த 4 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்ப செலவுக்கு பணம் இன்றி உஷா தவித்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டது.
வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷா கடந்த 21-ந் தேதி தனது 8 வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கினர். அவர்களை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நள்ளிரவு குழந்தை மகிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தாய் உஷா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் உஷா மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாருதி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி உஷா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் மகிமா என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மோகன்ராஜ் கடந்த 4 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்ப செலவுக்கு பணம் இன்றி உஷா தவித்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டது.
வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷா கடந்த 21-ந் தேதி தனது 8 வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கினர். அவர்களை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நள்ளிரவு குழந்தை மகிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தாய் உஷா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் உஷா மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X