என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே போலி டாக்டர் கைது
Byமாலை மலர்25 Nov 2020 2:31 AM GMT (Updated: 25 Nov 2020 2:31 AM GMT)
தேனி அருகே மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 46). இவர், கோடாங்கிபட்டி திருச்செந்தூர் காலனியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்த மருந்து கடையில் அவர் நோயாளிகளுக்கு ஊசி போட்டும், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கி வருவதாகவும் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணனுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரது தலைமையிலான மருத்துவத்துறையினர், அந்த மருந்து கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அப்துல்ரகுமான் டாக்டருக்கு படிக்காமல், போலி டாக்டர் போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இணை இயக்குனர் லட்சுமணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் அப்துல் ரகுமானை கைது செய்தார்.
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 46). இவர், கோடாங்கிபட்டி திருச்செந்தூர் காலனியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்த மருந்து கடையில் அவர் நோயாளிகளுக்கு ஊசி போட்டும், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கி வருவதாகவும் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணனுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரது தலைமையிலான மருத்துவத்துறையினர், அந்த மருந்து கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அப்துல்ரகுமான் டாக்டருக்கு படிக்காமல், போலி டாக்டர் போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இணை இயக்குனர் லட்சுமணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் அப்துல் ரகுமானை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X