search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீறும் கடல் அலை(கோப்புப்படம்)
    X
    சீறும் கடல் அலை(கோப்புப்படம்)

    அனைத்து மாவட்டங்களிலும் புயல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

    சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் புயல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    நிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் புயல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் புயல் நிலவரத்தை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள்.

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×