என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள்- மாவட்ட அலுவலர் அனுஷியா தகவல்
Byமாலை மலர்24 Nov 2020 2:39 PM GMT (Updated: 24 Nov 2020 2:39 PM GMT)
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள் என மாவட்ட அலுவலர் அனுஷியா கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயல், மழை காலத்தில் தீயணைப்பு வீரர்களின் பணி முக்கியமானது. மீட்பு பணிகளில் அதிக சிரத்தை எடுத்து தீயணைப்பு வீரர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவார்கள்.
தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுஷியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 130 வீரர்களும் இன்று (நேற்று) முதல் புயல், மழை பாதிப்பு குறையும் வரை தொடர்ந்து 24 மணி நேரமும் விடுப்பின்றி பணியில் ஈடுபடுவார்கள்.
மழை, வெள்ள காலங்களில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம். பொதுமக்கள் 101 என்ற எண்ணை அவசர உதவிக்கு அழைக்கலாம். எந்தவித பாதிப்புகளையும் எதிர்கொள்ள திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தீணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயல், மழை காலத்தில் தீயணைப்பு வீரர்களின் பணி முக்கியமானது. மீட்பு பணிகளில் அதிக சிரத்தை எடுத்து தீயணைப்பு வீரர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவார்கள்.
தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுஷியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 130 வீரர்களும் இன்று (நேற்று) முதல் புயல், மழை பாதிப்பு குறையும் வரை தொடர்ந்து 24 மணி நேரமும் விடுப்பின்றி பணியில் ஈடுபடுவார்கள்.
மழை, வெள்ள காலங்களில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம். பொதுமக்கள் 101 என்ற எண்ணை அவசர உதவிக்கு அழைக்கலாம். எந்தவித பாதிப்புகளையும் எதிர்கொள்ள திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தீணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X