search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை கொள்ளை
    X
    டாஸ்மாக் கடை கொள்ளை

    தலைவாசல் அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து திருட்டு

    தலைவாசல் அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தலைவாசல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையில் விற்பனையாளர்களாக கார்த்திகேயன், கிருஷ்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். மேற்பார்வையாளராக சின்ன மருதுபாண்டி என்பவர் வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று காலை 9 மணிக்கு சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் மதுக்கடையின் பூட்டு உடைந்து இருப்பதாக கடையின் விற்பனையாளர்கள் கார்த்திகேயன், கிருஷ்ணன், மேற்பார்வையாளர் சின்ன மருதுபாண்டி ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் 3 பேரும் வந்து கடையை பார்த்துள்ளனர். பின்னர் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் சின்ன மருதுபாண்டி புகார் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரன், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். அப்போது கடையின் ஷட்டர் மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது மது பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,130 மற்றும் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடு போனது தெரிந்தது. அதன்பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மதுக்கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்து துணிகர முறையில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×