search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    நெல்லை அருகே பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு

    நெல்லை அருகே நடந்து வந்த பெண்ணிடம் கவரிங் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள தாழையூத்து வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது 55). இவர் நேற்று காலை தாழையூத்து பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் வந்தார்.

    அவர் திடீரென்று தங்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச்சென்றார். தங்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகை கவரிங் நகை என்பது தெரியாமல் மர்ம நபர் பறித்துச்சென்றுள்ளார்.

    இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×