என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாய பணிகளுக்காக பாபநாசம் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்23 Nov 2020 1:59 PM GMT (Updated: 23 Nov 2020 1:59 PM GMT)
விவசாய பணிகளுக்காக பாபநாசம் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
வடகிழக்கு பருவமழையையொட்டி நெல்லை, மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதையொட்டி பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் காட்டாற்று வெள்ளம் மற்றும் ஊர் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாமிரபரணியில் கலந்து வெள்ளப்பெருக்காக மாறியது.
இதையொட்டி பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அணை மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழையின்றி மீண்டும் வெயில் அடித்தது. இதனால் விவசாய பணிகளுக்கு பாபநாசம் அணை மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 978 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 128.60 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 141.66 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 94.65 அடியாகவும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X