என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசாரின் இந்த செயல்கள் மனநல பிரச்சினைகளின் வெளிப்பாடு -நீதிமன்றம்
Byமாலை மலர்23 Nov 2020 10:11 AM GMT (Updated: 23 Nov 2020 10:11 AM GMT)
குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ போலீசாருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.
மதுரை:
மதுரை அல்லது திருச்சி சிறையில் மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்தக்கோரி ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கருத்து தெரிவித்த நீதிமன்றம், இந்தியாவைப் பொருத்தவரை சாதாரண மருத்துவர்களைவிட மனநல மருத்துவர்களே அதிகம் தேவை என்று கூறியது.
‘போலீஸ் வன்முறை மற்றும் லஞ்சம் பெறுவது மனநல பிரச்சினைகளின் வெளிப்பாடுதான். குடும்பம் ஒரு வகையில் அழுத்தங்களை உள்வாங்கிக்கொள்ளும் வடிகாலாக அமைகிறது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ போலீசாருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தென் தமிழக சிறைகளில் மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 25ம் தேதிக்கு (நாளை மறுநாள்) ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X