search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

    கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 44). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் செந்தில்வேலின் வீட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள், அங்கிருந்த பீரோவை திறந்து 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×