search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் -ஜீவிதா
    X
    விஜய் -ஜீவிதா

    வடமதுரை அருகே காதலியை கரம் பிடித்த நிதி நிறுவன ஊழியர்

    வடமதுரை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    வடமதுரை:

    வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நத்தம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ஜீவிதா (21). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

    அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இவர்கள், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பாதுகாப்பு கேட்டு, வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடியினர் தஞ்சம் அடைந்தனர். 

    போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விஜய் பெற்றோர், அவர்களை ஏற்றுக் கொண்டதால் மணமக்களை அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×