search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பாடாலூரில் இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி அரசு பஸ் டிரைவர் பலி

    பாடாலூரில் இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
    பாடாலூர்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் அரிதாஸ்(வயது 40). இவர் சென்னையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சொந்த வேலையாக அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து அரியநாயகிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராம பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, ஊட்டத்தூர் பிரிவு சாலை அருகே உள்ள இரும்பு தடுப்பு மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

    இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×