என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாடாலூரில் இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி அரசு பஸ் டிரைவர் பலி
Byமாலை மலர்23 Nov 2020 3:59 AM GMT (Updated: 23 Nov 2020 3:59 AM GMT)
பாடாலூரில் இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
பாடாலூர்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் அரிதாஸ்(வயது 40). இவர் சென்னையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சொந்த வேலையாக அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து அரியநாயகிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராம பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, ஊட்டத்தூர் பிரிவு சாலை அருகே உள்ள இரும்பு தடுப்பு மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X