என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்22 Nov 2020 9:41 PM GMT
கொருக்குப்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்:
சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர், சிகரந்தபாளையம், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் வாரியம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. அதற்கு பதிலாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் லாரிகள் மூலமும் சரிவர குடிநீர் வழங்கப்படாததால் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் பலனில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் நேற்று காலை ஆண்கள், பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் மீனாம்பாள் நகர் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
பின்னர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசி, லாரிகள் மூலம் உடனடியாக அந்த பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யவும் இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர், சிகரந்தபாளையம், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் வாரியம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. அதற்கு பதிலாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் லாரிகள் மூலமும் சரிவர குடிநீர் வழங்கப்படாததால் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் பலனில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் நேற்று காலை ஆண்கள், பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் மீனாம்பாள் நகர் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
பின்னர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசி, லாரிகள் மூலம் உடனடியாக அந்த பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யவும் இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X