search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விழுப்புரத்தில் ஆசிரியர் மனைவியிடம் 12 பவுன் நகை பறிப்பு

    விழுப்புரத்தில் ஆசிரியர் மனைவியிடம் 12 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள அனந்தபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57). இவர் முட்டத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும், இவருடைய மனைவி லாவண்யாவும் (50) நேற்று காலை விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதியம் 2.15 மணியளவில் கடைக்கு செல்வதற்காக விழுப்புரம் பூந்தோட்டம் பாதை வழியாக இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    பூந்தோட்டம் நகராட்சி பள்ளி அருகே செல்லும்போது இவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் திடீரென லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்தனர். உடனே சிவக்குமாரும், லாவண்யாவும் கூச்சலிட்டனர். அதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்து சிவக்குமார், விழுப்புரம் மேற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×