என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் ஆசிரியர் மனைவியிடம் 12 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்22 Nov 2020 5:23 PM GMT (Updated: 22 Nov 2020 5:23 PM GMT)
விழுப்புரத்தில் ஆசிரியர் மனைவியிடம் 12 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே உள்ள அனந்தபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57). இவர் முட்டத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும், இவருடைய மனைவி லாவண்யாவும் (50) நேற்று காலை விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதியம் 2.15 மணியளவில் கடைக்கு செல்வதற்காக விழுப்புரம் பூந்தோட்டம் பாதை வழியாக இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
பூந்தோட்டம் நகராட்சி பள்ளி அருகே செல்லும்போது இவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் திடீரென லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்தனர். உடனே சிவக்குமாரும், லாவண்யாவும் கூச்சலிட்டனர். அதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்து சிவக்குமார், விழுப்புரம் மேற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி அருகே உள்ள அனந்தபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57). இவர் முட்டத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும், இவருடைய மனைவி லாவண்யாவும் (50) நேற்று காலை விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதியம் 2.15 மணியளவில் கடைக்கு செல்வதற்காக விழுப்புரம் பூந்தோட்டம் பாதை வழியாக இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
பூந்தோட்டம் நகராட்சி பள்ளி அருகே செல்லும்போது இவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் திடீரென லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்தனர். உடனே சிவக்குமாரும், லாவண்யாவும் கூச்சலிட்டனர். அதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்து சிவக்குமார், விழுப்புரம் மேற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X