என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக மண்டல பொறுப்பாளர்கள் பட்டியல்- அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தென்காசி வடக்கு மாவட்டம் ஒதுக்கீடு
Byமாலை மலர்22 Nov 2020 8:50 AM GMT (Updated: 22 Nov 2020 8:50 AM GMT)
அதிமுக மண்டல பொறுப்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தென்காசி வடக்கு மாவட்டம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகம், புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி அ.தி.மு.க.வில் கட்சி பணிகளை ஒருங்கிணைக்க மண்டல பொறுப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்தது.
தற்போது இதில் தென்காசி வடக்கு மாவட்டம் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வசம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ தென்காசி வடக்கு மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை மேற்பார்வையிடுவார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களை கவனிப்பார்.
இதற்கான அறிவிப்பை கட்சி ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி அ.தி.மு.க.வில் கட்சி பணிகளை ஒருங்கிணைக்க மண்டல பொறுப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்தது.
தற்போது இதில் தென்காசி வடக்கு மாவட்டம் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வசம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ தென்காசி வடக்கு மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை மேற்பார்வையிடுவார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களை கவனிப்பார்.
இதற்கான அறிவிப்பை கட்சி ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X