என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- 3 பேர் பலி
Byமாலை மலர்22 Nov 2020 4:54 AM GMT (Updated: 22 Nov 2020 4:54 AM GMT)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உமையஞ்செட்டிபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் முரளி (வயது 20), பூச்சந்திரன் என்பவரது மகன் தங்கதுரை (23), தண்டபாணி என்பவரது மகன் சுரேஷ்குமார் (22). இவர்கள் பனியன் நிறுவன தொழிலாளர்கள். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பெருமாநல்லூர் பகுதியிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் அவினாசி அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது இவர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் ஒரு லாரி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து காகிதங்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த லாரியை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் முரளி, தங்கதுரை, சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் பேரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையில் கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவினாசி அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உமையஞ்செட்டிபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் முரளி (வயது 20), பூச்சந்திரன் என்பவரது மகன் தங்கதுரை (23), தண்டபாணி என்பவரது மகன் சுரேஷ்குமார் (22). இவர்கள் பனியன் நிறுவன தொழிலாளர்கள். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பெருமாநல்லூர் பகுதியிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் அவினாசி அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது இவர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் ஒரு லாரி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து காகிதங்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த லாரியை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் முரளி, தங்கதுரை, சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் பேரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையில் கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவினாசி அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X