search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    நல்லம்பள்ளி அருகே விபத்தில் வியாபாரி பலி

    நல்லம்பள்ளி அருகே விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 70). ஆட்டு வியாபாரி. இவர் அதியமான்கோட்டை அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி கூட்ரோடு பைபாஸ் சந்திப்பு சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வீரபத்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×