search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போடி அருகே ஓடையில் மணல் அள்ளிய டிரைவர் கைது

    போடி அருகே ஓடையில் மணல் அள்ளிய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போடி:

    போடி அருகே டி.புதுக்கோட்டை அடுத்த மணப்பாறை ஓடை பகுதியில் போடி தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சங்கராபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் மூலம் டி.தம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (25) ஓடையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×