என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் 8½ பவுன் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்21 Nov 2020 10:29 AM GMT (Updated: 21 Nov 2020 10:29 AM GMT)
தேனி அருகே வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் 8½ பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள டொம்புச்சேரியை சேர்ந்த பேயத்தேவர் மனைவி அன்னக்கொடி (வயது 74). இவர் நேற்று பகல் 12 மணியளவில் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து அன்னக்கொடியிடம் அவருடைய மகனை பற்றி விசாரித்தபடி பேச்சுக் கொடுத்தார். இந்தநிலையில் அந்த வாலிபர், திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 8½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு சிறிது தொலைவில் மற்றொரு வாலிபர் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அன்னக்கொடி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி அருகே உள்ள டொம்புச்சேரியை சேர்ந்த பேயத்தேவர் மனைவி அன்னக்கொடி (வயது 74). இவர் நேற்று பகல் 12 மணியளவில் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து அன்னக்கொடியிடம் அவருடைய மகனை பற்றி விசாரித்தபடி பேச்சுக் கொடுத்தார். இந்தநிலையில் அந்த வாலிபர், திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 8½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு சிறிது தொலைவில் மற்றொரு வாலிபர் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அன்னக்கொடி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X