என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்துக்கு வேனில் மது கடத்தி வந்தவர் கைது - 390 பாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்21 Nov 2020 8:37 AM GMT (Updated: 21 Nov 2020 8:37 AM GMT)
கோவாவில் இருந்து சேலத்துக்கு வேனில் மது கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 390 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
கோவாவில் இருந்து சேலத்துக்கு மதுபானம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று காலை சூரமங்கலம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி, வேனை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கன்னங்குறிச்சியை சேர்ந்த சதீஷ் (வயது 45) என்பதும், கோவாவில் இருந்து சேலத்துக்கு வேனில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 390 மது பாட்டில்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X