என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்21 Nov 2020 7:09 AM GMT (Updated: 21 Nov 2020 7:09 AM GMT)
ராசிபுரம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 21). இவருடைய உறவினர் பெண்ணுக்கு 15 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு அந்த சிறுமி வீட்டில் இருந்து பட்டணத்தில் உள்ள நந்தகுமார் வீட்டுக்கு வந்துவிட்டார்.
பின்னர் நேற்று காலையில் நந்தகுமாருக்கும், அந்த சிறுமிக்கும் திருமணம் பட்டணத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த தகவல் நாமக்கல் சைல்டுலைன் அமைப்பினருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கவிதா, ராசிபுரம் சமூக நலத்துறை மகளிர் ஊர்நல அலுவலர் கமலம், கிராம நிர்வாக அலுவலர் வான்மதி, ராசிபுரம் பெண் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று நந்தகுமாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். சிறுமி 18 வயதை அடையாததால் திருமணத்தை நடத்தக் கூடாது என்று அவர்களிடம் அறிவுறுத்தினர். அதன் பேரில் நேற்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் முன் ஆஜர்படுத்த சிறுமியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X