search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    பேரையூர் அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலி

    பேரையூர் அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    பேரையூர் அருகே உள்ள குருவப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நெருஞ்சி(வயது 46). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் சடைய கவுண்டன்பட்டி கிராமத்துக்கு பால் கறக்க சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் அதிகாலை பெய்த மழைக்கு மின்சார வயர் அறுந்து அங்குள்ள தகர செட்டிலும் அருகிலுள்ள கம்பி வேலியிலும் விழுந்திருந்தது. இதை கவனிக்காமல் கம்பி வேலியை பிடித்ததில் அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×