
புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம் பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்துள்ளார். 11 மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்திற்கு தேவையான காசோலையை, தனது சொந்த பணத்தில் இருந்து அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பாராட்டுவதாக கூறினார்.