search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎன் நேரு
    X
    கேஎன் நேரு

    மக்களின் ஆதரவை பெற்று சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறும்- கே.என்.நேரு

    சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று திமுக வெற்றி பெறும் என்று முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறினார்.
    சென்னை:

    திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.

    75 நாட்களில் 15 தலைவர்கள் 10 லட்சம் பேரை சந்தித்து அதிமுக ஆட்சியின் குறைகளை எடுத்துரைப்பர். சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று திமுக வெற்றி பெறும்.

    அமித்ஷா வருகையை கண்டு அதிமுக அமைச்சர்களே பயப்படாத நிலையில் நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×