என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சிற்றம்பலத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்20 Nov 2020 3:32 AM GMT (Updated: 20 Nov 2020 3:32 AM GMT)
திருச்சிற்றம்பலத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 40). டிராவல்ஸ் உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
அங்கு அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிகாலையில் எழுந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து ஆரோவில் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 40). டிராவல்ஸ் உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
அங்கு அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிகாலையில் எழுந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து ஆரோவில் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X