என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறந்தவரின் உடலை கால்வாயில் இறங்கி சுமந்து செல்லும் கிராம மக்கள்
Byமாலை மலர்20 Nov 2020 2:44 AM GMT (Updated: 20 Nov 2020 2:44 AM GMT)
திருக்குறுங்குடி அருகே இறந்தவரின் உடலை கால்வாயில் இறங்கி கிராம மக்கள் சுமந்து சென்றனர்.
ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இறையடிக்கால், கட்டளை புதுத்தெரு, மேலக்கட்டளை கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை இறையடிக்கால்வாய் கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் அங்கு பாலம் இல்லாததால் அங்கு செல்ல கிராம மக்கள் கால்வாயை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் கிராம மக்கள் உடல்களை கால்வாய்க்குள் இறங்கி சுமந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் இறந்தவர்களின் உடல்களை ஆபத்தான முறையில் சுமந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கட்டளை புதுத்தெருவை சேர்ந்த நாலாயுதம் (வயது 75) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை கால்வாயில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சுமந்தபடி கிராம மக்கள் சென்றனர். கால்வாய் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘தலைமுறை தலைமுறையாக இந்த அவலம் நீடித்து வருகிறது. நாங்கள் பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் முறையீடு செய்துள்ளோம். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. தற்போது பதவி ஏற்றுள்ள நெல்லை கலெக்டர் இதில் தலையிட்டு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இறையடிக்கால், கட்டளை புதுத்தெரு, மேலக்கட்டளை கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை இறையடிக்கால்வாய் கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் அங்கு பாலம் இல்லாததால் அங்கு செல்ல கிராம மக்கள் கால்வாயை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் கிராம மக்கள் உடல்களை கால்வாய்க்குள் இறங்கி சுமந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் இறந்தவர்களின் உடல்களை ஆபத்தான முறையில் சுமந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கட்டளை புதுத்தெருவை சேர்ந்த நாலாயுதம் (வயது 75) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை கால்வாயில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சுமந்தபடி கிராம மக்கள் சென்றனர். கால்வாய் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘தலைமுறை தலைமுறையாக இந்த அவலம் நீடித்து வருகிறது. நாங்கள் பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் முறையீடு செய்துள்ளோம். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. தற்போது பதவி ஏற்றுள்ள நெல்லை கலெக்டர் இதில் தலையிட்டு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X