search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    தனியார் ஆராய்ச்சி நிலைய ஊழியரின் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

    தனியார் ஆராய்ச்சி நிலைய ஊழியரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, 15 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
    திருவெறும்பூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் ஹரி பாஸ்கரன் (வயது 53). இவர் பெல் வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இங்குள்ள தனியார்ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 7 வருடமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 12-ந்தேதி குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருவாரூருக்குபாஸ்கரன் சென்றுவிட்டார்.

    பின்னர் நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, 15 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பாய்லர் ஆலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×