என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்.ஏ.சி. தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் திடீர் ராஜினாமா
Byமாலை மலர்18 Nov 2020 8:45 AM GMT (Updated: 18 Nov 2020 8:45 AM GMT)
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை:
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியை பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் தன்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேர வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் பத்மநாபன் விலகுவதாகவும், கட்சியின் உறுப்பினராக தொடரப்போவதாகவும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார்.
கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்தது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பொருளாளர் பொறுப்பில் இருந்து விஜய்யின் தாய் ஷோபாவும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X