என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷ வண்டு கடித்து பெண் பலி
Byமாலை மலர்17 Nov 2020 9:56 AM GMT (Updated: 17 Nov 2020 9:56 AM GMT)
திருச்சிற்றம்பலம் அருகே விஷ வண்டு கடித்து பெண் பலியானார். விஷ வண்டுகளை அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன்விடுதி நாகன் தெருவை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி காமாட்சி. (வயது 65). சம்பவத்தன்று இவர், தனது வீட்டின் அருகில் உள்ள வயலுக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது அந்த பகுதியில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் காமாட்சியையும், உடன் இருந்தவர்களையும் கடித்தன.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காமாட்சி பரிதாபமாக இறந்தார். இதே பகுதியை சேர்ந்த கணேசன் மகள் சினேகா(18), நல்லதம்பி மகன் புகழேந்தி(20) மற்றும் கண்ணபிரான்(45) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்கு கூடி கட்டியிருக்கும் விஷ வண்டுகளை அழிக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன்விடுதி நாகன் தெருவை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி காமாட்சி. (வயது 65). சம்பவத்தன்று இவர், தனது வீட்டின் அருகில் உள்ள வயலுக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது அந்த பகுதியில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் காமாட்சியையும், உடன் இருந்தவர்களையும் கடித்தன.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காமாட்சி பரிதாபமாக இறந்தார். இதே பகுதியை சேர்ந்த கணேசன் மகள் சினேகா(18), நல்லதம்பி மகன் புகழேந்தி(20) மற்றும் கண்ணபிரான்(45) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்கு கூடி கட்டியிருக்கும் விஷ வண்டுகளை அழிக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X