என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்17 Nov 2020 8:57 AM GMT (Updated: 17 Nov 2020 8:57 AM GMT)
பல்லடத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் இப்ராகிம். இவருடைய மகன் உசேன் (வயது 32). இவர் கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உசேனை பல்லடம் அறிவொளி நகர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். தீபாவளியன்று கரூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக இப்ராகிம் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதனால் உசேன் மட்டும் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டுக்காரர் இப்ராகிம்மிற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நேற்றுகாலை இப்ராகிம் மனைவி சாலி வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது உசேன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் தூக்குப்போட்டு 3 நாட்களுக்கு மேல் ஆனதால் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சாலி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விரைந்து வந்து உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X