search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மர்ம மரணம்- உதவி கலெக்டர் விசாரணை

    பாபநாசத்தில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுகா இரும்புதலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விஜயா(வயது21). இவரும், சேந்தமங்களத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் காதலித்து கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 

    இந்த நிலையில் விஜயா 5 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து செல்வம் மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விஜயாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×