search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான முருகனையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் படத்தில் காணலாம்.
    X
    கைதான முருகனையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் படத்தில் காணலாம்.

    வள்ளியூரில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

    வள்ளியூரில் கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய போலீசார் அங்குள்ள மெயின் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

    அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வள்ளியூர் ஊற்றடியை சேர்ந்த முருகன்(வயது35) என்பதும், கஞ்சா விற்பனைக்கு கொண்டு செல்வதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×