என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வள்ளியூரில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
Byமாலை மலர்15 Nov 2020 6:07 PM GMT (Updated: 15 Nov 2020 6:07 PM GMT)
வள்ளியூரில் கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய போலீசார் அங்குள்ள மெயின் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வள்ளியூர் ஊற்றடியை சேர்ந்த முருகன்(வயது35) என்பதும், கஞ்சா விற்பனைக்கு கொண்டு செல்வதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X