search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    திருநகர், ராயபுரத்தில் 17-ந்தேதி மின்தடை

    திருநகர் மற்றும் ராயபுரத்தில் 17-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இதுக்காது.
    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் திருநகர் துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்.நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர் ஜோதி கார்டன், கே.என்.எஸ். கார்டன், ஆலங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கதர் காலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், 

    பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமெண்டரி ஸ்கூல் முதல் மற்றும் 2-ம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி,முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லைநகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணன்நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, முருங்கப்பாளையம் ஒரு பகுதி, ராயபுரம்,ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, கோழிப்பண்ணை ஒரு பகுதி, மகாராணி டையிங் பகுதி, அணைப்பாளையம், அப்பல்லோஅவென்யூ, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், சுபாஸ் பள்ளி வீதி, பெரியாண்டிபாளையம், என்.வி.பி.லே அவுட் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×