என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் மோதி பனியன் நிறுவன கண்காணிப்பாளர் பலி
Byமாலை மலர்15 Nov 2020 9:35 AM GMT (Updated: 15 Nov 2020 9:35 AM GMT)
சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பனியன் நிறுவன கண்காணிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நல்லூர்:
காங்கேயம் கீரனூரை அடுத்த விஜயரங்கன் வலசு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர் மகன் ஜெயகணேஷ் (வயது 28). இவர் திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.நகர் 5-வது வீதியில் வாடகை வீட்டில் வசித்தபடி பனியன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கார்த்திகா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் பெருந்தொழுவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை எதிரில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஜெயகணேஷ் பலியானார். இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயகணேஷ் பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X