search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு கொள்ளை
    X
    பட்டாசு கொள்ளை

    ஆம்பூரில் பட்டாசுக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் வெடிகள் கொள்ளை

    ஆம்பூரில் பட்டாசுக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் வெடிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் புதிதாக பட்டாசுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×