என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
Byமாலை மலர்13 Nov 2020 3:54 AM GMT (Updated: 13 Nov 2020 3:54 AM GMT)
தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா ஊரடங்கால், பொது மக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை காலத்தில் கூடுதலாகவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல, அதிகளவில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளதால், காத்திருப்போர் பட்டியலும் நீண்டு உள்ளது.
இந்தநிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக, தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில் சேவைகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-செங்கோட்டை (வண்டி எண்: 06181) சிறப்பு ரெயிலில் கூடுதலாக, படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகளும், எழும்பூர்-கொல்லம் (06063) சிறப்பு ரெயிலில் கூடுதலாக, படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியும், எழும்பூர்-நாகர்கோவில்(06063) சிறப்பு ரெயிலில், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகளும், எழும்பூர்-கன்னியாகுமரி-எழும்பூர்(02633/02634) சிறப்பு ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டியும் ஒரு இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எழும்பூர்- தூத்துக்குடி-எழும்பூர் (02693/02694) சிறப்பு ரெயில், எழும்பூர்-நெல்லை(02631) சிறப்பு ரெயில், எழும்பூர்-செங்கோட்டை(02661) சிறப்பு ரெயில் மற்றும் தஞ்சாவூர்-எழும்பூர் (06866) சிறப்பு ரெயில்களில் தலா பெட்டியும், எழும்பூர்-காரைக்குடி(02605) சிறப்பு ரெயிலில் ஒரு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், பொது மக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை காலத்தில் கூடுதலாகவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல, அதிகளவில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளதால், காத்திருப்போர் பட்டியலும் நீண்டு உள்ளது.
இந்தநிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக, தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில் சேவைகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-செங்கோட்டை (வண்டி எண்: 06181) சிறப்பு ரெயிலில் கூடுதலாக, படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகளும், எழும்பூர்-கொல்லம் (06063) சிறப்பு ரெயிலில் கூடுதலாக, படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியும், எழும்பூர்-நாகர்கோவில்(06063) சிறப்பு ரெயிலில், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகளும், எழும்பூர்-கன்னியாகுமரி-எழும்பூர்(02633/02634) சிறப்பு ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டியும் ஒரு இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எழும்பூர்- தூத்துக்குடி-எழும்பூர் (02693/02694) சிறப்பு ரெயில், எழும்பூர்-நெல்லை(02631) சிறப்பு ரெயில், எழும்பூர்-செங்கோட்டை(02661) சிறப்பு ரெயில் மற்றும் தஞ்சாவூர்-எழும்பூர் (06866) சிறப்பு ரெயில்களில் தலா பெட்டியும், எழும்பூர்-காரைக்குடி(02605) சிறப்பு ரெயிலில் ஒரு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X