என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணிடம் ஆபாசமாக பேசிய டெய்லருக்கு அடி-உதை: 2 பேர் கைது
Byமாலை மலர்12 Nov 2020 9:59 AM GMT (Updated: 12 Nov 2020 9:59 AM GMT)
நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய டெய்லருக்கு அடி-உதை விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 31), டெய்லர். இவர் அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போனுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் கணவர் டெய்லர் கடைக்கு சென்று ஏன் என் மனைவியை செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாய் என கேட்டு அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த டெய்லர் பிரபு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி டெய்லர் பிரபு மற்றும் இளம்பெண்ணின் கணவர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X