search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ராஜாமணி
    X
    கலெக்டர் ராஜாமணி

    ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தல்

    ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தி உள்ளார்.
    கோவை:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும், தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் என மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும்.

    மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் சமூக இடைவெளியுடன் நின்று கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். மேலும் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×