என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்றிரவு 8.30 மணிக்கு வந்தனர். அப்போது தாசில்தார் லதா அவர்களை கண்டதும் காரில் வெளியேற முயன்றார்.
போலீசார் அவரை உள்ளே வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் தாலுகா அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அலுவலக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடமும் சோதனை நடந்தது. நள்ளிரவு வரை நடந்த சோதனையில் அவரது காரில் ரூ.46ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த ஏராளமான பரிசு பொருட்களையும் கைப்பற்றினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் தொடர் சோதனை நடத்தி வரும் நிலையில் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்