search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன்
    X
    தினகரன்

    அமமுக பொருளாளர், துணைப்பொதுச்செயலாளர் நியமனம்: தினகரன் அறிவிப்பு

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளராக திருச்சி ஆர்.மனோகரன், துணைப்பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் செந்தமிழன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர், கழக பொருளாளர், கழக தலைமை நிலையச் செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சரும், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான ஜி.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் ஏற்கனவே கழக துணைப் பொதுச்செயலாளர்களாக செயலாற்றி வரும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.

    அ.ம.மு.க. பொருளாளராக முன்னாள் அரசு கொறடா, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் சி.சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் ஏற்கனவே கழக தலைமை நிலையச் செயலாளராக செயலாற்றி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவனுடன் இணைந்து பணியாற்றுவார்.

    தேர்தல் பிரிவு செய லாளராக ராணிப் பேட்டை மாவட்ட செய லாளர் என்.ஜி.பார்த்திபன் நியமிக் கப்பட்டுள்ளார்.

    இவர், ஏற்கனவே தேர்தல் பிரிவு செயலாளராக செயலாற்றி வரும் மாணிக்க ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவார்.

    புதிய நிர்வாகிகளில் இதுவரை கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருந்த மனோகரன், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்த செந்தமிழன், அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்த சண்முக வேலு ஆகியோர் அந்த பொறுப்புகளிலிருந்து விடு விக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×